Pages

Monday, June 30, 2014

புத்தகங்கள் வழங்காததால் மாணவர்கள் அவதி

மரக்காணம் ஒன்றியத்தில் ஆங்கில வழி கல்வி ஆரம்ப பள்ளிகளுக்கு புத்தகம் வழங்காததால் மாணவர்கள் அவதியடைகின்றனர்.


மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்தில் 56 ஊராட்சிகளில் 30க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் உள்ள அரசு துவக்கப் பள்ளிகளில் இந்தாண்டு ஆங்கில வழிக் கல்வி திட்டம் துவக்கப்பட்டுள்ளது. அந்தந்த பகுதியில் உள்ள பெற்றோர்கள் ஆங்கில கல்வி திட்டத்தை விரும்பி மாணவ, மாணவிகளை சேர்த்துள்ளனர்.

பள்ளி ஆரம்பித்து இது வரை ஆங்கில வழி கல்வி புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கவில்லை. நோட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பல பள்ளிகளில் ஆங்கில ஆசிரியர்கள் நியமிக்காததால் மாணவ, மாணவிகள் வகுப்பில் காலையில் இருந்து மாலை வரை காத்திருந்து விட்டு வீட்டிற்கு வந்து விடுகின்றனர்.

இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் நட வடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.