Pages

Friday, May 23, 2014

கணிதப் பாடத்தில் குறைந்த சென்டம் எண்ணிக்கை!

2014ம் ஆண்டின் பொதுத்தேர்வு முடிவுகளில், கணிதப் பாடத்தில் சென்டம் எண்ணிக்கை குறைந்துள்ளது.

பொதுவாக, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களைவிட, கணிதப் பாடத்தில் சென்டம் எடுப்பது எளிது என்பது பலரின் கருத்து. அதற்கேற்ப, கணிதத்தில் சென்டம் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும்.


ஆனால், இந்தமுறை கணிதப் பாடத்தைவிட, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் சென்டம் எண்ணிக்கை பெரிய வித்தியாசத்தில் அதிகரித்துள்ளது.

இந்தாண்டு கணிதப் பாடத்தில் சென்டம் பெற்றவர்கள் 18 ஆயிரத்து 682 பேர்தான். ஆனால், அறிவியல் பாடத்தில், 69 ஆயிரத்து 560 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 26 ஆயிரத்து 554 பேரும் சென்டம் பெற்றுள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் கடந்த 2013ம் ஆண்டிலும், கணிதப் பாடத்தைவிட, அறிவியல் பாடத்தில் சென்டம் எடுத்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது என்பது நினைவுகூறத்தக்கது.

1 comment:

  1. Expected questions were not asked was the reason for this. And the result percentage also slashed due to maths paper in few government schools.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.