Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, May 21, 2014

    அங்கீகாரம் இல்லாத மழலையர் பள்ளிகள் மூடல்

    கோவையில் அங்கீகாரம் இல்லாத 49 மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டன. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 விதி 18 (1)-ன்படி எந்தவொரு மழலையர் மற்றும் துவக்கப் பள்ளியும் அரசின் ஒப்புதல் பெறாமல் நடைபெறக் கூடாது என விதிகள் வரையறை செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு ஒப்புதல் பெறாமல் நடைபெறும் மழலையர் மற்றும் துவக்கப் பள்ளிகளுக்கு இச்சட்டத்தின்படி 3 முறை கேட்பு குறிப்பாணை அனுப்புமாறும், அவ்வாறு குறிப்பாணை அனுப்பிய பின்னரும் ஒப்புதல் பெறாமல் தொடர்ந்து நடைபெறும் பள்ளிகளை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியரின் ஒத்துழைப்புடன் நடவடிக்கை மேற்கொள்ளவும் அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    கோவை வருவாய் மாவட்டத்தில் உள்ள 49 மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் ஆரம்ப அங்கீகாரம் மற்றும் அரசின் ஒப்புதலின்றி நடைபெற்று வருவதால் ஆகஸ்ட் 13 முதல் ஜனவரி வரையுள்ள கால கட்டத்தில் 3 முறை காரணம் கேட்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
    ஆனால், எந்தவொரு பள்ளியும் இதுவரை அங்கீகார கருத்துருவை முழு வடிவில் உரிய ஆவணங்களுடன் அளிக்காததால் அரசின் உத்தரவின்படி கோவை மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை செய்து, முதல் கட்டமாக ஆரம்ப அங்கீகாரமின்றி செயல்படும் மற்றும் ஆரம்ப அங்கீகாரம் பெறாததால் தாமாகவே பள்ளியை மூடிக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ள 49 பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
    மேலும், இப்பள்ளிகளில் குழந்தைகளை ஏற்கெனவே யாரேனும் சேர்ந்திருந்தால் அவர்களின் மாற்று சான்றுகளை பெற்று அங்கீகாரம் பெற்ற வேறு பள்ளிகளில் சேர்க்க வேண்டும். அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் விவரத்தை கோவை டவுன்ஹால் மணிக்கூண்டு அருகில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    No comments: