த்தாம் வகுப்பு மறுக்கூட்டலுக்கு மே 31ந்தேதிக்குள் தலைமை ஆசிரியர்கள் மூலம் ஆன்-லைனில் பதிவு செய்யலாம் என, தேர்வு துறை அறிவித்துள்ளது.
மறு கூட்டலுக்கு விரும்புவோர் அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்களை அணுகி www.sslc14rt.in என்ற முகவரியில் பதிவு செய்யவேண்டும். மொழி பாடத்திற்கு ரூ.305. பிற பாடங்களுக்கு ரூ.205 செலுத்த வேண்டும். மே 31ந்தேதி வரை பதிவு செய்யலாம்.
இதே போன்று 2014 பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் சிறப்பு துணைத்தேர்வு எழுத விரும்பி னால், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் பதிவுக்கட்டணமாக ரூ.50 மற்றும் 125 செலுத்தி பதிவு செய்யலாம்.
தனித்தேர்வர்கள் தங்களது தேர்வு மையத்தில் பதிவு செய்யலாம் என, தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.