ஓட்டை, 1,000 ரூபாய்க்கு விக்கறா ஓய்...'' என, பேச்சைத் துவக்கினார் குப்பண்ணா.
''தேர்தல் தான் முடிஞ்சிடுச்சே... பழைய கதையை சொல்றீங்களா பா...'' என்றார் அன்வர்பாய்.
''இது, அரசு ஊழியர்களின் தபால் ஓட்டு ஓய்... இந்த தேர்தல்ல, கடலுார் தொகுதியில, ஐந்து முனை போட்டி இருப்பதால, யார் ஜெயிச்சாலும், குறைஞ்ச ஓட்டு வித்தியாசத்துல தான் ஜெயிப்பா... அதனால, அரசு ஊழியர்களின் தபால் ஓட்டுகளை, எப்படியாவது வாங்கிடணும்னு, அரசியல் கட்சியினர், போட்டி போடறா...
''இதனால, அரசு ஊழியர்கள் பலரும், தங்களை நாடி வரும் அரசியல் பிரமுகர்களிடம், 1,000 ரூபாய், 1,500 ரூபாய்னு பேரம் பேச ஆரம்பிச்சுட்டா... இதை தெரிஞ்சுண்டு, இதுவரை தபால் ஓட்டு கிடைக்காத அரசு ஊழியர்களும், தபால் ஓட்டு கேட்டு தேர்தல் அலுவலர்களை நச்சரிக்கறா ஓய்...'' என்றார் குப்பண்ணா.
No comments:
Post a Comment