Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, April 12, 2014

    நாடாளுமன்ற தேர்தல் பணி அலுவலர்கள் கணினி மூலம் தேர்வு

    திருச்சி  தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தொகுதி வாரியாக கணினி மூலம் நேற்று தேர்வு செய்யப்பட்டனர். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக 2,319 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
    ஒவ்வொரு வாக்குசாவடிகளிலும் 1 வாக்குசாவடி தலைமை அலுவலர், 4வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் பணியாற்றுபவர்கள் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 11,410 பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
    தேர்தல் பணியில் ஈடுபட உள்ள வாக்குசாவடி தலைமை அலுவலர், வாக்குசாவடி நிலை அலுவலர்கள் 1, 2, 3 மற்றும் 4 ஆகியோரை முதற் கட்டமாக தேர்வு செய்யும் பணி கடந்த 29ம் தேதி அன்று நடைபெற்றது. திருச்சி தொகுதி தேர்தல் பணிக்காக முதற் கட்டமாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் 2 நாள் நடத்தப்பட்டது. 
    தற்போது முதற்கட்ட பயிற்சி பெற்ற பணியாளர்கள், எந்தெந்த சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணி யில் ஈடுபட வேண்டும் என்பது குறித்தும், பின்னர் குழு வாரியாக வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குசாவடி நிலை அலுவலர்கள் 1,2,3 மற்றும் 4தேர்வு செய்யும் பணியும் கணினி மூலம் தேர்வு செய் தல் மாவட்ட கலெக்டர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயஸ்ரீ தலைமையில் தேர்தல் பொது ப்பார்வையாளர் ஹரேந்திரநாத் போரா, செலவின பார்வையாளர்கள் சத்யஜித் சிங், சிவ்பிரகாஷ் வி.பட்டி ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

    2 comments:

    BASKI said...

    பெண் ஊழியர்கள் கணினி மூலமாக தேர்ந்து எடுக்கப்படு்வது தவிர்க்க ப்பட்டு மேனுவலாக அருகில் உள்ள இடங்களில் தேர்ந்து எடுக்கப்படுவார்கள்் என்ற தேர்தல் கமிஷனின் அறிவிப்பு என்னவாயிற்று ?

    Unknown said...

    athelam summa arivuppu mattumthan pola