Pages

Sunday, April 20, 2014

ஓட்டுச்சாவடி அருகே 'பூத்' எப்படி? ; தேர்தல் கமிஷன் விளக்கம்

'ஓட்டுச்சாவடி அருகே வேட்பாளர்கள் சார்பில் அமைக்கப்படும் பூத்தில், ஒரு மேஜை, இரண்டு நாற்காலிகள் மட்டும் இருக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

அதன் விவரம்:
* ஓட்டுச்சாவடியில் இருந்து, 100 மீட்டருக்குள் 'பூத்' இருக்க கூடாது.
* மொபைல் போன், அந்த எல்லைக்குள் அனுமதிக்கப்படாது.
* ஓட்டுச் சாவடியில் இருந்து, 200 மீட்டருக்குள், வேட்பாளர்கள், பூத் அமைத்து கொள்ளலாம்.
* அதில், ஒரு மேஜை, இரண்டு நாற்காலிகள் மட்டும் போடலாம்.
* வெயிலுக்கு குடை பிடித்துக் கொள்ளலாம். வெயில் மிகவும் அதிகமாக இருந்தால், அதிகாரிகள் அனுமதி பெற்று, தார்ப்பாய் அல்லது துணியால், கூரை அமைத்துக் கொள்ளலாம். இவ்வாறு, தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.