Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, April 11, 2014

    அடிப்படை பணியாளர்கள் இல்லை, மாணவர்களே பணியாளர் ஆகும் அவலம்

    மாநிலம் முழுவதும் செயல்படும் ஆரம்பப்பள்ளிகளில், 90 சதவீத அடிப்படை பணியாளர்கள் பணியிடம் காலியாகவுள்ளதால், பல்வேறு இடங்களில், பள்ளி மாணவர்கள் பணியாளர்களாகும் அவலம் தொடர்ந்து வருகிறது.

    தமிழகத்தில் 35 ஆயிரத்து 182 ஆரம்பப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் 32.2 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் 1.4 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 90 சதவீத பள்ளிகளில் துப்புரவு பணியிடங்கள் இல்லாததால், ஆசிரியர்களும், மாணவர்களும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது.

    கடந்த 25 ஆண்டுகளுக்கு முன், பள்ளிகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன. பின், ஓய்வுபெறும் பணியாளர்களின் பணியிடங்கள் நிரப்பாமல் விடப்பட்டு, தற்போது காலிப் பணியிடங்கள் 90 சதவீதமாக அதிகரித்துள்ளன. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் வாயிலாக அடிப்படை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    நடுநிலைப் பள்ளிகளில், சமீபத்தில் கோர்ட் உத்தரவின்படி, 40 சதவீத பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். மீதம் உள்ள பள்ளிகளின் நிலை கேள்விக்குறியாக விடப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் கண்ணன் கூறியதாவது: பள்ளிகளில் தலைமையாசிரியர், ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதுபோல், அடிப்படை பணியாளர்களையும் நியமிப்பது அவசியம். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை ஒப்பிடுகையில், ஆரம்பப்பள்ளி மாணவர்கள் பயிலும் இடங்களில் கட்டாயம் அடிப்படை பணியாளர்கள் அவசியம்.

    பல இடங்களில், மாணவர்கள் வகுப்பறைகள், பள்ளிகளை சுத்தம் செய்வதாக புகார் எழுவதற்கு, பணியாளர்கள் நியமிக்காமல் அலட்சியமாக செயல்படும் அரசே பொறுப்பு. பல பள்ளிகளில், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் இணைந்து அவர்களின் சொந்த பணத்தில் துப்புரவு பணியாளர்களை நியமித்துள்ளனர்.

    மாணவர்களை போன்று, ஆசிரியர்களும் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து ஆரம்பப் பள்ளிகளிலும், அடிப்படை பணியாளர்களை உடனடியாக நியமிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

    No comments: