Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, April 4, 2014

    ஆசிரியர் அடித்ததாக கூறி அரசு பள்ளி முற்றுகை

    பா.வெள்ளாளபாளையம் அரசு பள்ளியில் மாணவரை ஆசிரியர் அடித்து துன்புறுத்தியாக கூறி உறவினர்கள் திடீரென பள்ளியை முற்றுகையிட்டனர்.


    பா.வெள்ளாளபாளையத்தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது. வெள்ளாள பாளையம், குழவிகரடு, தொட்டிபாளையம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 230 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளியில் ஆசிரியராக சுந்தரேசன் பணியாற்றுகிறார்.

    வெள்ளாளபாளையத்தை சேர்ந்த லோகுகிருஷ்ணன், கோதண்டீஸ்வரி தம்பதியினரின் மகன் சிவபாலன், அங்கு நான்காம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம், மாணவன் சிவபாலனை, ஆசிரியர் அடித்து துன்புறுத்தினாராம். ஆத்திரம் அடைந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டதா ல் பரபரப்பு ஏற்பட்டது.

    பெற்றோர் கூறியதாவது: நேற்று முன்தினம், 4ம் வகுப்பில் மாணவர்கள் சிலர் சண்டை போட்டுள்ளனர். அங்கு வந்த ஆசிரியர் சுந்தரேசன், மாணவன் சிவபாலன், சண்டையிட்டதாக நினைத்து கழுத்தை பிடித்து தூக்கி கீழே போட்டார். மாணவன் கழுத்தில் பயங்கர வலி ஏற்பட்டது. வலியால் சிவபாலன் துடிக்கிறார்.

    பள்ளி மாணவர்களை, ஆசிரியர்கள் பேன் பார்க்கவும், நகம் வெட்டி விடவும் சொல்கின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ஆசிரியர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். தகவல் அறிந்த போலீஸார் பேச்சுவார்ததை நடத்தி, கூட்டத்தை கலைத்தனர்.

    No comments: