Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, April 4, 2014

    தேர்தல் பணியாற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வலியுறுத்தல்

    மக்களவைத் தேர்தலில் பணியாற்றும் பெண் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பெண் காவலர்களை நியமித்து போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அரசை வலியுறுத்தியுள்ளது.

    திருச்சியில் அண்மையில் நடைபெற்ற கூட்டணியின் மாநகரச் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    திருச்சி நகர சரகத்திற்குள்பட்ட நிதியுதவி பெறும் பள்ளிகளுóக்கு 2007,08-ம் ஆண்டுகளுக்குரிய பள்ளி பராமரிப்பு மானியம் வழங்கப்படசவில்லை. இதை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    85 ஆண்டுகளாக வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் ஜின்னா தெரு நகராட்சித் தொடக்கப்பள்ளிக்கு சொந்த கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    கூட்டத்துக்கு கூட்டணியின் மாநகரத் தலைவர் ம. ஜேம்ஸ் தலைமை வகித்தார். திருச்சி மாவட்டச் செயலர் ஜோ. ஆல்பர்ட் தாஸ் முன்னிலை வகித்தார். மாநகரச் செயலரும்,மாநிலச் செயற்குழு உறுப்பினருமான சே. நீலகண்டன் சிறப்புரையாற்றினார்.
    மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் அமல் ஜேசுராஜ், பொறுப்பாளர்கள் சிராஜுதீன், ரெக்ஸ் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். துணைச் செயலர் அ.பெர்ஜித்ராஜன் நன்றி கூறினார்.

    No comments: