Pages

Wednesday, April 16, 2014

தேர்தல் பணி : கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கு விலக்கு அளிக்கக் கோரிக்கை

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களில் கர்ப்பிணிகள், கை குழந்தை வைத்திருக்கும் ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுகுறித்து அக்கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் தாஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் பணியில் நியமித்து அதற்கான ஆணையை தேர்தல் ஆணையம் வழங்கி வருகிறது.

இதில் 150 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் சென்று பணி புரிய உள்ளதாலும், ஒரு நாளைக்கு முன்பே செல்ல வேண்டியுள்ளது. இதனால் கர்ப்பிணி ஆசிரியர்கள், கை குழந்தை வைத்திருக்கும் ஆசிரியர்கள் ஆகியோர் கடும் மன உளைச்சலுக்கும், சிரமத்துக்கும் ஆளாகியுள்ளனர்.
குறிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்கும் இதில் விலக்கு அளிக்கவில்லை. எனவே தேர்தல் ஆணையத்தினர் உரிய பரிசீலனை செய்து இவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். அல்லது குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் பணியிடங்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.