Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, April 4, 2014

    சென்னை மாவட்ட அரசு உதவி பெறும் ஆசிரியர்களுக்கு மார்ச்'14 ஊதியம் விரைவில் பெற்று தர வழிவகுத்த த.ஆ.கூ பொதுச்செயலாளர் செ.முத்துசாமி அவர்களுக்கும், இயக்குநரின் துரித நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் பாராட்டு

    சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு நிதி உதவி பள்ளிகளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, மாவட்ட நிர்வாகத்திடமிருந்து 2014-2015 நிதி ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு வழங்காததால் மார்ச் மாத ஊதியம் கருவூலத்தில் சமர்பிக்க முடியாமல், பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிப்புக்குள்ளாயினர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் விளக்கம் கேட்ட போது, தொடக்க கல்வி இயக்குனரகம் மூலம் மாவட்ட வாரியக நிதி ஒதுக்காததால் தங்களால் ஆணை ஏதும் வழங்க இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் தலைமை நிலைய செயலாளர் திரு.க.சாந்தகுமார், சார்ந்த சங்க பொதுச் செயலாளர் திருமிகு. செ.முத்துசாமி அவர்களின் கவனத்திற்கு இப்பிரச்சனையை 02.03.2014 மதியம் 01.00 மணியளவில் எடுத்து சென்றார். உடனே பொதுச்செயலாளர் அவர்கள் நமது தொடக்க கல்வி இயக்குநர் முனைவர். இளங்கோவன் அவர்களை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இப்பிரச்சனை சார்பு முறையிட்டார்.

    தொடக்க கல்வி இயக்குநர் அவர்கள் உடனே மாவட்ட நிர்வாகத்தை அழைத்து பேசி, உடனே நிதி ஓதுக்கீடு வழங்கும் பணியை இயக்குனரகம் மூலம் முடுக்கி விட்டு மாலை 04.00 மணியளவில் சென்னை மாவட்ட நிர்வாகத்தினருக்கு நிதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது.. பின்பு மாலை 06.00 மணிக்குள் சென்னை மாவட்டத்தில் உள்ள பத்து ஓன்றியங்களுக்கும் நிதி ஒதுக்கீடு ஆணை மாவட்ட நிர்வாகத்தால் அளிக்கப்பட்டது.. தொடக்க கல்வி இயக்குனரகத்தில் இருத்து பொதுச் செயலாளர் திருமிகு. செ.முத்துசாமி அவர்களை தொலைப்பேசியில் அழைத்து அனைத்து ஆசிரியர்களும் ஊதியம் பெற எடுக்கபட்ட நடவடிக்கையின் விபரத்தை தெரிவித்தனர். இயக்குநரின் துரித நடவடிக்கைக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் திருமிகு.செ.முத்துசாமி தமது நன்றியினை தெரிவித்தார்.

    ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனையை களைய முனைப்புடன் செயலாற்றிய தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் திருமிகு.செ.முத்துசாமி மற்றும் தொடக்க கல்வி இயக்குநர் முனைவர்.இளங்கோவன் அவர்களுக்கு சங்க வேறுபாடின்றி சென்னை மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர் பெருமக்கள் தமது நன்றியினை தெரிவித்தனர்.

    No comments: