Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, April 20, 2014

    10ம் வகுப்பு மாணவர்களுக்கும் விடைத்தாள் நகல் வழங்கும் திட்டம்?

    பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் அமலில் உள்ள விடைத்தாள் நகல் வழங்கும் திட்டத்தை, 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் நீட்டிக்க வேண்டும்" என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு வெளியீட்டிற்குப் பின், மாணவர்கள், தேர்வுத் துறைக்கு விண்ணப்பித்து, கணிதம், இயற்பியல், உயிரியல், வேதியியல் உள்ளிட்ட முக்கிய பாட விடைத்தாள் நகல்களை பெற முடியும். மறுமதிப்பீடு, மறு கூட்டல் கோரியும் மாணவர்கள் விண்ணப்பிக்க வசதி உள்ளது.

    விடைத்தாள் நகல் கேட்டு ஒவ்வொரு ஆண்டும் 80 ஆயிரம் பேர் வரை விண்ணப்பிக்கின்றனர். பல மாணவர்கள் வாழ்க்கையின் 
    பொக்கிஷமாக விடைத்தாள் நகல் இருக்க வேண்டும் என்பதற்காக நகலை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். ஆனால் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மறு கூட்டல் வாய்ப்பு மட்டுமே உள்ளது.

    எனவே பிளஸ் 2 மாணவர்களைப் போல் விடைத்தாள் நகல் வழங்கல் மற்றும் மறுமதிப்பீடு போன்ற வாய்ப்பையும் தங்களுக்கு வழங்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    தேர்வுத் துறை வட்டாரம் கூறுகையில், "அரசு உத்தரவிட்டால் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் விடைத்தாள் நகல் வழங்க முடியும். இதில் எந்த பிரச்னையும் இல்லை" என தெரிவித்தது.

    No comments: