மே மாதம் முதல் வாரத்தில் இருந்து, பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வழங்கப்பட இருப்பதாக அண்ணா பல்கலை வட்டாரம் நேற்று தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மே 4 முதல் 20ம் தேதி வரை அண்ணா பல்கலை மட்டும் இல்லாமல், பல்கலை உறுப்பு கல்லூரி மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன; 2.34 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆயின. ஜூன் இறுதி முதல் ஜூலை இறுதி வரை நடந்த மாணவர் சேர்க்கை கலந்தாய்வில், 1.5 லட்சம் இடங்கள் நிரம்பின; 50 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களுக்கு சேர ஆளில்லை.
வரும், 2014-15ம் கல்வி ஆண்டுக்கான, மாணவர் சேர்க்கைக்கு மே மாதம் முதல் வாரத்தில் இருந்து, விண்ணப்பம் வழங்க முடிவு செய்திருப்பதாக, அண்ணா பல்கலை வட்டாரம் நேற்று தெரிவித்தது. "பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி 24ல் துவங்கி, 15 நாளில் முடிய உள்ளது. பாட வாரியாக மதிப்பெண் தொகுப்பு மற்றும் தேர்வு முடிவு தயாரிக்கும் பணிகள், அடுத்த, இரண்டு வாரம் வரை "டேட்டா சென்டரில்" நடக்கும். எப்படியும் மே மாதம் 7ம் தேதிக்குள் பிளஸ் 2 முடிவு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே மே மாதம் முதல் வாரத்தில் இருந்து விண்ணப்பம் வழங்குவது சரியாக இருக்கும் என, அண்ணா பல்கலை., கருதுகிறது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.