அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கீழ்கண்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட் தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இடம் : மாவட்ட தலைநகரம்
நாள் : 19.02.2014
நேரம் : மாலை 5 மணி
10 அம்ச கோரிக்கைகள்
1. அரசாணையின் படி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பணிமாறுதல் கலந்தாய்வு நடத்திட வேண்டும்
2. வரும் கல்வியாண்டு முதல் 1000 ஆசிரியர் பயிற்றுநர்களை பள்ளிக்கு பணிமாறுதல் செய்திட வேண்டும்
3.ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு வழங்கப்படும் நிலையான பயணப்படியை ரூபாய் 2500/- ஆக உயர்த்திடல் வேண்டும்
4. மாநிலம் முழுவதும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு ஒரே மாதிரியான பணி விதிமுறைகளை செயல்படுத்த வேண்டும்
5. பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுவதும் நீக்கி பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்
6. ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு மடிக்கணினி வழங்கவேண்டும்
7. நிலுவையிலுள்ள புதிய மருத்துவ காப்பீட்டு திட்ட்த்தின் அடையாள அட்டைகளை உடனடியாக வழங்க வேண்டும்
8. ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு மாதந்தோறும் குறைதீர் கூட்டங்கள் நடத்திட வேண்டும்
9. ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு வாடைகையில்லாத குழுவிற்கான அலைபேசி எண்கள் வழங்கவேண்டும்.
10. நிலுவையிலுள்ள ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்
No comments:
Post a Comment