Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, February 18, 2014

    தமிழ்நாடு அனைத்து வள மைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்

    அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கீழ்கண்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட் தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

    இடம் : மாவட்ட தலைநகரம்
    நாள் : 19.02.2014
    நேரம் : மாலை 5 மணி

    10 அம்ச கோரிக்கைகள்

    1. அரசாணையின் படி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பணிமாறுதல் கலந்தாய்வு நடத்திட வேண்டும்

    2. வரும் கல்வியாண்டு முதல் 1000 ஆசிரியர் பயிற்றுநர்களை பள்ளிக்கு பணிமாறுதல் செய்திட வேண்டும்

    3.ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு வழங்கப்படும் நிலையான பயணப்படியை ரூபாய் 2500/- ஆக உயர்த்திடல் வேண்டும்

    4. மாநிலம் முழுவதும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு ஒரே மாதிரியான பணி விதிமுறைகளை செயல்படுத்த வேண்டும்

    5. பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுவதும் நீக்கி பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்

    6. ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு மடிக்கணினி வழங்கவேண்டும்

    7. நிலுவையிலுள்ள புதிய மருத்துவ காப்பீட்டு திட்ட்த்தின் அடையாள அட்டைகளை உடனடியாக வழங்க வேண்டும்

    8. ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு மாதந்தோறும் குறைதீர் கூட்டங்கள் நடத்திட வேண்டும்

    9. ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு வாடைகையில்லாத குழுவிற்கான அலைபேசி எண்கள் வழங்கவேண்டும்.

    10. நிலுவையிலுள்ள ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்

    No comments: