Pages

Friday, February 28, 2014

உண்மை நிலை....

அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் போராட்டம் நடத்தினாலே ஊதிய உயர்வுக்குத் தான் என்ற ஒரு தவறான மனநிலையை மக்கள் மனநிலையில் பதிய வைத்துள்ளார்கள் ஆட்சியாளர்கள்.

உண்மையில் நடப்பது என்னவெனில் எங்களுடைய ஊதியத்தில் 10%தை பிடித்தம் செய்து தனியார் பங்குச்சந்தை எனும் சூதாட்டத்தில் முதலீடு செய்து லாபம் வந்தால் உங்களுக்கு நட்டம் வந்தாலும் உங்களுக்கே என்ற நிலையை மத்தியில் உள்ள ஆளுகிற கட்சியும் ஆளவேண்டும் என்கிற கட்சியும் சேர்ந்து செயல்படுத்தி வருகின்றன.

இது பல லட்சம் ஊழியர்களின் வாழ்வாதாரத்தையே கேள்வியாக்கியுள்ளது என்பதை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.

உங்கள் பணம் உங்கள் கையில் என்ற திட்டம் கொண்டு வந்த அரசு எங்கள் பணம் யார் கையிலோ என்ற முறையில் செயல்படுத்துவது நியாயம் தானா?

ஊதியக்குழு என்பது தற்போது வாங்கும் ஊதியத்தை தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப உயர்த்தி வழங்கப் பரிந்துரைக்கும் ஆனால் எங்கும் இல்லாத யாரும் கண்டிராத ஆறாவது ஊதியக்குழு வாங்கிய சம்பளத்தையே குறைத்துக் கொடுக்க பரிந்துரை செய்து வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது.

அதில் உள்ள குளறுபடிகளை நீக்கித் தாருங்கள் எனப் போராடினால் அதையும் தவறாக சித்தரிக்க முயல்கின்றனர்.

இதை வேலைக்கு வரும் வரை எதிர்ப்பவர்கள் வேலைக்கு வந்தவுடன் ஆதரிக்கிறார்கள் இதற்கு காரணம் உண்மைநிலை தெரியாததா ?இல்லை தன் சுயநலமா என்பதும் தெரியவில்லை .

எனவே ஒரு போராட்டம் எனில் அதன் உண்மைநிலை தெரிந்து விமர்சிப்பதே அறிவார்ந்த செயலாக இருக்க முடியும்.

2 comments:

  1. நல்ல. முறையில். இதை எங்கே விளக்கி சொல்ல தலைவர் கள் இல்லையே .தலைவர்கள் தங்கள் அணி பெரியதாக காட்ட அலையும் போது பாவம் இ நி ஆசிரியர் கள்

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.