Pages

Thursday, February 27, 2014

யாருக்கு வாக்களிப்பது? குழப்பத்தில் இடைநிலை ஆசிரியர்கள் யாருக்கு வாக்களிப்பது?

பெரும் குழப்பத்தில் 75000 இடைநிலை ஆசிரியர்களும் அவரது குடும்பத்தார்களும் உள்ளனர்.கடந்த தி.மு .க.ஆட்சியில் ஆறாவது ஊதியக்குழுவில் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை சுட்டிக்காட்டி போராட்டங்களைச் செய்தார்கள் ஆனால் அவ்வரசு அவர்களை கண்டுகொள்ளவில்லை அதனால் வெறுப்பில் இருந்த இடைநிலை
ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் கவரும் வண்ணம் அப்போதைய எதிர்க்கட்சி இப்போதைய ஆளுங்கட்சியான அ.தி.மு .க தன்னுடைய தேர்தல் அறிக்கையில் ஊதியக் குழு முரண்பாடுகள் நீக்கப்படும் பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்படும் என்று அறிவித்து அவர்களின் நம்பிக்கையைப் பெற்றது.ஆனால் இதுவரை அவைகளை நிறைவேற்றாததால் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் அதிருப்தியில் உள்ளனர்.எனவே இந்த முறை யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பத்தில் உள்ளனர்.இதுபோன்ற குளறுபடிகள் எல்லாத் துறைகளிலும் காணப்படுவதால் அவர்களும் குழப்பத்தில் உள்ளதாகக் கூறுகின்றனர்.எனவே இந்த முறை யார் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள் என்பதை உற்றுநோக்கியே வாக்களிப்பார்கள் எனத் தெரிகிறது.இரண்டு முக்கிய கட்சிகளும் புறக்கணிப்பதால் ஆசிரியர்கள் போராட்டங்களை வலுப்படுத்தி வருகின்றனர்.

8 comments:

  1. தொடரும் பழி வாங்கும் படலம் சுதாரித்துக்கொள்ள வேண்டும் தொடக்கப்பள்ளி உயர்,மேல் நிலைப் பள்ளியில் பணியாற்றும்இடை நிலை ஆசிரியர்களே உஷார்.கயவர்கள் நம்மை புறக்ணிக்கணிக்கிறார்கள்.எலக்ஷனுக்காக எதையும் வாக்குறுதி கூறுவார்கள்

    ReplyDelete
  2. ADMK kandipa podathinga thurokinga

    ReplyDelete
  3. not only ADMK also DMK vote NOTA

    ReplyDelete
  4. yes you are correct

    ReplyDelete
  5. ஆசிரியர்களே உப்பிட்ட உதயசூரியனை மறவாதீர்

    ReplyDelete
  6. You are all teacher.please also consider our nation,so vote to lotur.not for bjp.only for modi

    ReplyDelete
  7. You are all teacher.please also consider our nation,so vote to lotus.not for bjp.only for modi

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.