தனியார் நிறுவனங்களின் மொபைல் போன் கட்டணங்கள் விரைவில் உயர்த்தப்படவுள்ளன. நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு, மொபைல் போன் சேவையை வழங்கி வரும் தனியார் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கும் கட்டணத்தை உயர்த்த போவதாக அறிவித்து உள்ளன.
""எங்கள் நிதி நிலையை சமாளிக்க, மொபைல் போன் கட்டணங்கள் விரைவில் உயர்த்தப்படும். அதற்கான சரியான தருணம் வந்துள்ளது. விரைவில் கட்டண உயர்வு அறிவிக்கப்படும்,'' என, "வோடபோன்' நிறுவன தலைமை செயல் அதிகாரி, மார்டின் பீட்டர்ஸ் தெரிவித்து உள்ளார்.
வோடபோனை அடுத்து, ஏர்டெல், ஐடியா, ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களும் விரைவில் கட்டணங்களை உயர்த்தவுள்ளன. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தற்போதுள்ள கட்டணம் உயர்வதோடு, இலவச அழைப்புகள், சலுகைகள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
No comments:
Post a Comment