Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, February 17, 2014

    மொபைல் போன் கட்டணங்களை உயர்த்த தனியார் நிறுவனங்கள் முடிவு

    தனியார் நிறுவனங்களின் மொபைல் போன் கட்டணங்கள் விரைவில் உயர்த்தப்படவுள்ளன. நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு, மொபைல் போன் சேவையை வழங்கி வரும் தனியார் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கும் கட்டணத்தை உயர்த்த போவதாக அறிவித்து உள்ளன.

    ""எங்கள் நிதி நிலையை சமாளிக்க, மொபைல் போன் கட்டணங்கள் விரைவில் உயர்த்தப்படும். அதற்கான சரியான தருணம் வந்துள்ளது. விரைவில் கட்டண உயர்வு அறிவிக்கப்படும்,'' என, "வோடபோன்' நிறுவன தலைமை செயல் அதிகாரி, மார்டின் பீட்டர்ஸ் தெரிவித்து உள்ளார்.
    வோடபோனை அடுத்து, ஏர்டெல், ஐடியா, ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களும் விரைவில் கட்டணங்களை உயர்த்தவுள்ளன. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தற்போதுள்ள கட்டணம் உயர்வதோடு, இலவச அழைப்புகள், சலுகைகள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

    No comments: