மதிய உணவு இடைவேளை நேரத்தை அதிகம் செலவழிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, உத்தர பிரதேச முதல்வர், அகிலேஷ் யாதவ் எச்சரித்துள்ளார். உத்தர பிரதேசத்தில், மதிய உணவு நேர இடைவேளையில், அதிகாரிகள் பலர் வீட்டுக்கு சென்று விடுவதாக, புகார் வந்தது.
இது குறித்து, உ.பி., பொதுப்பணித் துறை அமைச்சர், சிவபால் யாதவ் குறிப்பிடுகையில், ""உணவு நேர இடைவேளையில், அதிகாரிகள் வீட்டுக்குச் செல்வதை அனுமதிக்க முடியாது; மீறி செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். இது குறித்து, உ.பி., முதல்வர், அகிலேஷ் யாதவ் குறிப்பிடுகையில், ""மதிய உணவு இடைவேளை நேரத்தை அதிகம் செலவழிப்பவர்கள், பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவர்,'' என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.