கோவை ராமநாதபுரம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் செல்வி(15)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். செல்விக்கு 2 வயதான போது அவரது தந்தை பிரிந்து சென்று விட்டதால் அவரது தாயார் வேலைக்குச் சென்று அவரை வளர்த்து வந்தார்.
இந்நிலையில் தாயாரும் மலேசியாவில் வேலை கிடைக்கவே அங்கு சென்று விட்டார். இதனால் செல்வி திருவள்ளுவர் நகரில் உள்ள பாட்டி வீட்டில் விட்டில் இருந்தபடியே செல்வி பள்ளிக்கு சென்றுவந்துள்ளார். செல்வியின் பெரியம்மா கணவர் ரமேஷ்குமார்(44) என்பவரும் அதே பகுதியில் வசித்து வருகிறார்.
தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் ரமேஷ்குமார் செல்வி வீட்டில் இருக்கும் போது வீட்டுக்குள் புகுந்து பாலியல் தொல்லை கொடுத்துவந்துள்ளார்.கடந்த நவம்பர் மாதம் முதல் ரமேஷ்குமாரரின் பாலியல் தொல்லையால் அவதிப்பட்டு வந்த செல்வி ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார்.
போலீஸார் வழக்கு பதிவு செய்து ரமேஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment