இன்று காலை முதற்கட்டமாக தொடக்கக் கல்வி இயக்குனருடன் நடைபெற்ற கோரிக்கைகள் குறித்த பேச்சுவார்த்தையின் இறுதியில் பள்ளிக்கல்வி செயலாளருடன் சந்திக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்து இருந்தார். இதையடுத்து நாளை காலை 10மணியளவில் தலைமை செயலகத்தில் மதிப்புமிகு பள்ளிக்கல்வி செயலாலருடன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை சார்ந்த மாநில தலைவர் திரு.காமராஜ், பொதுச் செயலாளர் திரு.ரெங்கராஜன் மற்றும் பொருளாளர் திரு.ஜோசப் சேவியர் ஆகியோர் சந்தித்து கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இதுகுறித்து மாநில தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் கூறுகையில் 7அம்சக் கோரிக்கைகள் நிறைவேற்றுவதற்காக மாண்புமிகு தமிழக முதல்வர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர்.
7 comments:
Awaiting for good news
What about promotion
S g promotion counciling eppothu?
education secretary Madam only decided counciling.all r request madam.
ரத யாத்திரை நடத்தலாம்
Koottani only force govt for counciling,but all koottani talk about 7 demands only.so kottanies no interest in counciling.
No.education secretary. Madam only decided.
Post a Comment