"பாலியல் தொடர்பான ஆபாசமான காட்சிகளை வெளியிடும், இணையதளங்களை, முறையான கோர்ட் அல்லது அரசு உத்தரவு இல்லாமல், எங்களால் தடை செய்ய முடியாது" என இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளன.
இணைதளங்களில் வெளியாகும், பாலியல் தொடர்பான ஆபாச காட்சிகளுக்கு தடை விதிப்பது குறித்த வழக்கின் விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நடந்தது. அப்போது, இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் தாக்கல் செய்த பதிலில் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இதுதெடார்பாக மூன்று வாரங்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி மத்திய தொலைதொடர்பு துறைக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.