Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, January 2, 2014

    தனித்தேர்வர்களுக்கு தனி அறை இல்லை: தேர்வுத்துறை

    "பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்களுக்கு இனி, தனி அறை கிடையாது. பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து தேர்வெழுத வேண்டும்" என தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.


    பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தோல்வி அடைந்தவர்கள், அவர்களுக்காக நடத்தப்படும் சிறப்பு தேர்வு எழுதுவது வழக்கம். அதிலும் தோல்வியடைந்தால், அடுத்தாண்டு நடைபெறும் பொதுத்தேர்வில் பங்கேற்பர். அவர்கள் சீருடை அணிந்திருக்க மாட்டார்கள். மேலும், வயது வித்தியாசம் இருக்கும் என்பதால், தனித்தேர்வர்களுக்கு தேர்வு மையத்தில் தனியறை ஒதுக்கப்பட்டது; ஒரு மையத்தில் ஓரிரு தனித்தேர்வர் மட்டுமே தேர்வு எழுதினாலும், அவர்களுக்கு தனியறை ஒதுக்கி, தனி ஆசிரியர், கண்காணிப்பாளர் நியமிக்க வேண்டியிருந்தது.

    சில நேரங்களில் அவர்கள் தேர்வுக்கு வராமல் போனால், "டியூட்டி"யை மாற்ற வேண்டிய சிரமம், கடைசி நேரத்தில் ஏற்படுவது வழக்கம். இத்தகைய சிக்கல்களை தவிர்க்க, தனித்தேர்வர்களுக்கு தனியறை வழங்க வேண்டாம் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், "தனித் தேர்வர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அவர்களை தனியே பிரிக்காமல், பள்ளி மாணவர்களுடன் இணைந்து, ஒரே அறையில் தேர்வு எழுத அனுமதியுங்கள். 20 பேருக்கு அதிகமாக மாணவர்களை அமர வைக்கும்போது, ஆசிரியர்களால் கவனம் செலுத்த முடியாது. எனவே, ஒரு அறையில் 20 பேர் மட்டுமே இருக்க வேண்டும். கூடுதலாக இருந்தால், வேறொரு அறை ஏற்படுத்திக் கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளது" என்று கூறினர்.

    No comments: