Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, January 16, 2014

    தனியார் பள்ளிகள், மருத்துவ மனைகளுக்கு "கிடுக்கிப்பிடி'

    நேரடியாகவோ, மறைமுகமாகவோ, அரசிடமிருந்து உதவி பெறும் தனியார் அமைப்புகளை, ஜன் லோக்பால் மசோதா வரம்பிற்குள் கொண்டு வர, டில்லி மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள், குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு நன்கொடை கேட்டால், அதுகுறித்து, லோக்பால் அமைப்பிடம், பெற்றோர் புகார் செய்யலாம்.
    டில்லி மாநிலத்தில் புதிதாக பதவியேற்றுள்ள, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி அரசு, அதிரடியான நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. லஞ்சம் மற்றும் ஊழல்களை அடியோடு ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை, மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஊழலுக்கு எதிரான, ஜன் லோக்பால் மசோதாவை, அடுத்த மாதம், சட்டசபையில் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. இதில், முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
    குறிப்பாக, அரசு உதவி பெறும் அமைப்புகளை, லோக்பால் வரம்பிற்குள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, அரசிடமிருந்து, நேரடியாகவோ, மறைமுகமாகவோ, நிதி அல்லது பிற உதவி பெறும், தனியார் பள்ளிகள், தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்டவை, லோக்பால் வரம்பிற்குள் வரும்.
    இந்த பள்ளிகள், குழந்தைகளை சேர்ப்பதற்கு நன்கொடை கேட்டால், பெற்றோர், இதுகுறித்து புகார் செய்யலாம். அதே போல், அரசு உதவி பெறும் மருத்துவமனைகள், அதிகபட்ச கட்டணம் கேட்டாலும், அதுகுறித்து, நோயாளிகள், லோக்பால் அமைப்பில் புகார் செய்யலாம். இந்த புகார்கள் குறித்து, லோக்பால் அமைப்பு விசாரித்து, சம்பந்தப்பட்ட அமைப்புகள் மீது, நடவடிக்கை எடுக்கும்.

    No comments: