Pages

Saturday, January 25, 2014

தொடக்க கல்வி ஆசிரியர்கள் அடுத்த மாதம் போராட்டம் 7அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தொடக்க கல்வி ஆசிரியர்கள் பிப்ரவரி 2 தேதி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் பாலசந்தர் சென்னையில்
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.


அப்போது அவர் கூறியதாவது: மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டும் என்று நீண்டகாலமாக
போரட்டம் நடத்திவருகிறேம். தேர்தல் காலத்தில் அதிமுக எங்கள் கோரிக்கை நிறைவேற்றுவதாக தங்களுடைய தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டனர். ஆனால் அரசு இதுவரை எந்தவிதமான முடிவையும் அறிவிக்கவில்லை. தமிழ்வழி கல்வி தொடர வேண்டும். தன் பங்கேற்பு ஒய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் .ஆசிரியரி தகுதி தேர்வை ரத்துசெய்யவேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கையை முன்வைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆட்சியர் அலுவலகம் முன்பு அடுத்த மாதம் (பிப்ரவரி) 2 ம் தேதி போராட்டம் நடத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம்.எங்கள் பிரச்சனைகள் குறித்து பேச முதல்வரின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.