ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள், எஸ்.ஏ.,(summative assessments) தேர்வில், குறைந்தபட்சம் 25% மதிப்பெண் பெற்றால்தான், அவர்கள் அடுத்த வகுப்பிற்கு தகுதிபெற முடியும் என்ற விதியை CBSE கட்டாயமாக்கியுள்ளது.
இந்த விதி கடந்தாண்டே அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், அதன் தாக்கங்கள், SA2 தேர்வுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் இந்த நேரத்தில்தான் மாணவர்களிடம் வேலைசெய்ய தொடங்கியுள்ளன. இந்த புதிய விதி அமலுக்கு வரும் முன்னதாக, ஒரு மாணவரின் மதிப்பெண் பட்டியல்(marksheet), ஒவ்வொரு பாடத்தின் இரண்டு SA தேர்வுகள் மற்றும் 4 பார்மேடிவ் மதிப்பீடுகளின் (Formative Assessment) ஆகியவற்றின் கூட்டு மதிப்பெண்கள் ஆகியவை மதிப்பெண் பட்டியலில் இடம் பெற்றிருக்கும்.
இது மாறாமல் நீடித்திருக்கும் சூழலில், மாணவர்கள் தற்போதை ய நிலையில், ஒவ்வொரு SA -விலும், 60க்கு குறைந்தபட்சம் 15 மதிப்பெண்கள் பெற வேண்டும். இதன்மூலம், மாணவர்களுக்கு விளையாட்டுத்தனமான மனப்பான்மை நீங்கி, எதையும் சீரியசாக எடுத்துக் கொண்டு, முறையாக செயல்படக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.