வேலைவாய்ப்புகள், வேலை கொடுப்போர், வேலை தேடுவோரின் எதிர்பார்ப்புகள் குறித்து "ரேண்ட்ஸ்டான்ட் இந்தியா"வின் "குளோபல் ஓர்க் மானிட்டர்" ஆய்வினை வெளியிட்டுள்ளது.
ஆய்வறிக்கையின் விவரங்கள்
தற்பொழுது இருப்பதை விட, அடுத்த 5 ஆண்டுகளில் சமூகத் திறன்கள், தொழில்நுட்ப திறன்கள், அனுபவம் ஆகியவை அதிகமாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும்.
கடந்த 5 ஆண்டுகளில் இருந்ததைவிட தற்பொழுது வேலை வழங்குவோரின் எதிர்பார்ப்புகள் அதிகமாகியிருப்பதாக ஆய்வில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டுகளில் வேலைக்கான தேவைகள் தொடர்ந்து குறிப்பிடத்தக்க வகையில் மாற்றம் கண்டு வந்துள்ளது.
ஆய்வில் கலந்துகொண்ட பாதி பேர் தங்கள் வேலைகேற்ற திறன்களோடு தாங்கள் இல்லை என கருதுகின்றனர்.
மேலும் வேலைக்கான முன் அனுபவம் முக்கியம் என்று ஒரு சாராரும், கல்வியும், பயிற்சியும் அவசியம் என ஒரு பகுதியினரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment