ஒரு நாட்டின் எதிர்காலம், அதன் கல்வி முன்னேற்றத்தை சார்ந்தே இருக்கிறது என்று அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் முன்னாள் இயக்குநர் ரகுநாத் மஷேல்கர் கூறினார்.
டாக்டர் அம்பேத்கர் மராத்வாடா பல்கலையில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் மேலும் கூறியதாவது: நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் கல்வி பெறும் உரிமையுடையவர்கள். ஆனால் அனைவருக்கும் சரியான கல்வி கிடைக்கிறதா என்பதை நாம் கட்டாயம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இந்தியா போன்ற அதிக இளம்வயது மக்கள் தொகை கொண்ட நாட்டில், உயர்கல்வியும், திறன் வாய்ந்த இளைஞர்களும் மிகச் சிறந்த முதலீடுகள்.
இந்தியாவில் உயர்கல்வி பெரிய அளவில் அனைவருக்கும் சென்று சேரவில்லை. எனவே, அதிகளவு மத்திய பல்கலைகள், ஐ.ஐ.டி.,கள் மற்றும் ஐ.ஐ.எம்.,கள் போன்றவை அமைக்கப்பட வேண்டியது கட்டாயம். ஒரு சாதாரண மனிதனுக்கும் தரமான கல்வி கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment