Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, December 15, 2013

    மாணவர்களை தண்ணீர் எடுக்க கட்டாயப்படுத்தும் ஆசிரியர்கள்

    மதிய உணவு இடைவேளை நேரத்தில், பள்ளி மாணவர்கள், விவசாய தோட்டத்தில் இருந்து, தண்ணீர் எடுத்து வரும்படி, ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. கெங்கவல்லி அருகே, ஒதியத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 120க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
    மதிய உணவு இடைவேளை நேரத்தில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கோகிலகிருஷ்ணன், சக்திதுரை, தமிழ்செல்வன் ஆகியோர், விவசாய தோட்ட தொட்டியில் உள்ள தண்ணீரை, பிளாஸ்டிக் குடத்தில் பிடித்து, அவற்றை எடுத்து செல்ல முடியாமல் தள்ளாடியபடி சென்றனர்.
    அந்த தண்ணீரை, மாணவர்கள் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு குடிக்க எடுத்துச் செல்வதாக, மாணவர்கள் தெரிவித்தனர். சாலையில் நடந்து வரும் மாணவர்களுக்கு, பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
    மாணவ, மாணவியரை, இதர வேலைக்கு பயன்படுத்தக் கூடாது என, தமிழக பள்ளிக் கல்வித்துறை, எச்சரிக்கை செய்துள்ளது. ஆனால், விவசாய தோட்டத்தில் இருந்து, தண்ணீர் எடுத்து வரும்படி, மாணவர்களை, பள்ளி ஆசிரியர்கள் கட்டாயப்படுத்துவது, பெற்றோர்கள் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    பள்ளி நேரத்தில் தண்ணீர் எடுத்து வரும்படி அனுப்பிய ஆசிரியர்கள் மீது, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்களது பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    1 comment:

    viji said...

    Poottukkodu....