Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, December 4, 2013

    மாணவர்களை செருப்பால் அடித்த ஆசிரியர் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டம்

    tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperஉடுமலை அருகே கடத்தூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 6ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்களை ஆசிரியர் ஒருவர் செருப்பால் அடித்துள்ளார்.
    இதுபற்றி அறிந்த 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் நேற்று பள்ளியை முற்றுகையிட்டனர். மாணவர்களை தாக்கிய ஆசிரியரை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என தலைமையாசிரியரிடம் கூறினர். தலைமை ஆசிரியர், சம்பந்தப்பட்ட ஆசிரியரை அழைத்து விசாரித்த போது மாணவர்கள் குறும்பு செய்ததால் அடித்ததாக அவர் தெரிவித்தார். பெற்றோர்கள் ஆவேசம் அடைந்தனர். அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    மடத்துக்குளம் தாசில் தார் விஜயகுமார் பள்ளிக்கு விரைந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோர்களை அமைதிப்படுத்தினார். மாணவர்களை தாக்கிய ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட கல்வி அதிகாரியிடம் பரிந்துரை செய்யப்படும் என அவர் கூறியதை தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்ட பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர். - See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=50990#sthash.TDsZKQtl.64ffebCi.dpuf

    No comments: