Pages

Wednesday, December 18, 2013

நீலகிரி, கடலூரில் விடுமுறை அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவில் மகா ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புக்களுக்கான அறிவிக்கப்பட்டுள்ள அரையாண்டு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.


நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறையை மாவட்ட கலெக்டர் சங்கர் அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஹெத்தையம்மன் கோவில் திருவிழாபடுகர் இன மக்களால் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. 

இதன் காரணமாக நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது, எனினும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரையாண்டு தேர்வுகள் திட்டமிட்ட படி நடக்கும் என்று மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள தகவலில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.