பி.எட்., எம்.எட்., மற்றும் எம்.பில்., ஆகிய பிரிவுகளில் மொத்தம் 69,195 பேருக்கு பட்டமளிக்கும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் விழா, டிசம்பர் 16ம் தேதி நடைபெறவுள்ளது.
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இந்த பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இது அப்பல்கலையின் 4வது பட்டமளிப்பு விழாவாகும்.
இதுகுறித்து தொடர்புடைய வட்டாரங்கள் கூறியதாவது: வரும் 16ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடைபெறும் இவ்விழாவிற்கு தமிழக கவர்னர் ரோசய்யா தலைமை தாங்குகிறார். உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் முன்னிலை வகிக்கிறார்.
பி.எட்., எம்.எட்., மற்றும் எம்.பில்., ஆகிய படிப்புகளில், மொத்தம் 87 பேருக்கு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. மேலும், மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற பி.எட்., மற்றும் எம்.எட்., பட்டதாரிகளுக்கும் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.
ஆசிரியர் கல்வியியல் பல்கலையில் அடுத்த கல்வியாண்டு முதல், M.Phil மற்றும் Ph.D படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இதற்கான ஒப்புதலை சிண்டிகேட் வழங்கியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment