பட்டதாரிகளிடையயே வேலையின்மை கடுமையாக உயர்ந்துள்ளது என தொழிலாளர் அமைச்சகத்தின் அறிக்கை கூறுகிறது. 29 வயதுக்குள் உள்ள பட்டதாரிகளில் மூன்றில் ஒருவர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். கிராமப்புறத்தில் 36% ஆகவும் நககர்ப்புறத்தில் 26.5% ஆகவும் வேலையின்மை உள்ளது. ஒரு ஆண்டிற்கு முன்பு 13% ஆக இருந்த வேலையின்மை தற்பொழுது 33%ஆக உயர்ந்துவிட்டது. (பிசினஸ் லைன் 29.11.2013).
வேலையின்மை இன்று மிகப்பெரிய பூதாகரமான பிரச்சனையாக உருவாகி வருகிறது. தொழிலில் கடு மந்தம்,விவசாயத்தின் வீழ்ச்சி ஆகியவை வேலையின்மை பிரச்சனையை மேலும் கடுமையாக்கியுள்ளன. நமது பொருளாதாரப் பாதை எப்பொழுதும் வேலையின்மையை தீர்ப்பதாக அமையவில்லை.கடந்த 20 ஆண்டுகளாக அரசுகள் பின்பற்றிய சந்தை சார்ந்த பொருளாதாரம்(market economy) இப்பிரச்சனையை அதிக கூர்மை அடைய வைத்துள்ளது.
கிடைக்கின்ற வேலையும் குறைங்ந்த பட்ச ஊதியத்தை உத்தரவாதப் படுத்துவதாக இல்லை. நமது ததேசத்தில் சுமார் 42 கோடிபேர் தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களில் 85% பேர் அதாவது சுமார் 36 கோடிபேர் முறைசாரா தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களுக்கு பணிப்பாதுகாப்போ அல்லது சமூக பாதுகாப்போ இல்லை.
காங்கிரசுக்கு தான் மாற்று என ஏற்கெனவ தான் பிரதமராக ஆகிவிட்டதாக எண்ணிக்கொண்டுள்ள மோடியும் இதற்கு தீர்வு சொல்ல இயலாது. ஏனெனில் மோடியிடம் மாற்று கொள்கைகள் இல்லை. தொழில் மற்றும் விவசாயத்தில் அரசாங்கம் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்தால்தான் ஓரளவு பிரச்சனை தீரும். எனினும் அரசாங்கம் இதற்கு தயாராக இல்லை.
வேலையிலாத இளைஞனும் தொழிலாளியே என்ற கோட்பாடின் அடிப்படையில் உழைப்பாளிகளும் வேலையில்லா பட்டாளமும் இணைந்து இயக்கம் கண்டால் மட்டுமே இதற்கு ஓரளவிற்காவது தீர்வு கிடைக்கும்.
No comments:
Post a Comment