கருப்பு நிலாவை இனி வானில் காண முடியாது. என்ற ஏக்கம் உலக மக்களின் விழிகளை ஈரமாக்கிகொண்டே இருக்கிறது!மு.வே.யோகேஸ்வரன்
(1) கெரில்லாப் போராட்ட பயிற்சி பெற்றவர் மண்டேலா.
(2) ஓர் சிறந்த குத்துச் சண்டை வீரர்.
(3) 1961 ஆம் ஆண்டு மண்டேலா ஆபிரிக்க தேசிய காங்கிரசின் ஆயுதப் படை தளபதி ஆனார்.ராணுவத்துக்கு எதிராக பல கெரில்லாத் தாக்குதல்களை திறம்பட நடாத்தினார்.
(4) 1962இல் வெள்ளை இனவெறி அரசு அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது.
(5) 1964இல் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
(6) ராபன் தீவு என்னும் ஒரு தீவில் 18 ஆண்டுகள் தொடர்ந்து தனிமைச் சிறையில் வைக்கப்பட்டார்.பேச்சு துணைக்கு கூட அங்கே அப்போது யாரும் இல்லை.
(7) 1982இல் போல்ச்மூர் சிறைக்கு அங்கிருந்து மாற்றப்பட்டார்.
(8) சிறையில் மண்டேலா இருந்தபோது அவருக்கு காசநோய் தாக்கியது. அதனால், அவரை விடுதலை செய்யவேண்டும் என்ற போராட்டங்கள் உலகமெங்கும் இருந்து கிளம்பின.ஆனால் அவர் விடுதலை செய்யப்படவில்லை.சிறையிலேயே கொடிய நோயை சுமந்து மிகவும் வருந்தினார்.
(9) வெள்ளையரின் அரசில், ஆட்சி மற்றம் ஏற்பட்டபோது,பிரடெரிக் வில்லியம் என்பவர் பதிவிக்கு வந்ததும், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் மீது இருந்த தடையை நீக்கினார்.
(10) 1990இல் மண்டேலா அதனால் விடுதலை ஆனார்.
(11) சிறையில் அவர் இருந்தபோதே இந்தியாவின் நேரு சமாதான விருது,பாரத ரத்தினா ஆகிய விருதுகள் அவருக்கு இந்தியாவால் வழங்கப் பட்டது
(12) 1993இல் உலகின் மிகப்பெரிய விருதான, சமாதானத்துக்கான நோபல் பரிசு மண்டேலாவுக்கு வழங்கப் பட்டது.
(13) ஜூலை 18 ஆம் திகதியை சர்வதேச மண்டேலா தினமாக ஐ.நா. சபை அறிவித்து, அவரைக் கௌரவித்தது .
(14) 1994ஆம் ஆண்டு கறுப்பர் இனத்தின் முதல் அதிபர் ஆனார் மண்டேலா. துன்பங்களையும் இன்பங்களையும் மாறி மாறி உலகில் சுமந்த ஓர் விடுதலைப் போராட்ட வீரன் மண்டேலா..என்பது மட்டுமல்ல.உலகில் தொடர்ந்து 27 வருடங்கள் விடுதலைக்காக சிறைவாசம் அனுபவித்த ஓர் உலகத் தலைவரும் அவரேதான். கருப்பு நிலாவை இனி வானில் காண முடியாது. என்ற ஏக்கம் உலக மக்களின் விழிகளை ஈரமாக்கிகொண்டே இருக்கிறது !
No comments:
Post a Comment