Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, December 16, 2013

    கண் இமைத்தால் எரியும் மின் சாதனங்கள்: கலசலிங்கம் பல்கலை மாணவர்கள் சாதனை

    கண் இமைப்பின் மூலம் கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டில் பல்பு, டிவி, பிரிட்ஜ், பேன்களை இயங்க செய்யும் புதிய மின் "சர்க்யூட்"டை கண்டுபிடித்து கலசலிங்கம் பல்கலை மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

    இதை கண்டு பிடித்த மின்னியல், மின்னணுவியல் துறை இறுதியாண்டு பி.டெக் மாணவர்களான ராம்பிராஷாந்த், சபரீஷ், சஞ்சய் காந்தி கூறியதாவது: "கண்களின் இமைப்பதன் மூலம் கம்ப்யூட்டரை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அதை "வெப் கேமரா"வில் பதிவு செய்து அதன் மூலம் வீட்டிலுள்ள மின்சார பல்பு, டிவி, பிரிட்ஜ், பேன்களை ஆப், ஆன் செய்ய முடியும்.

    வலது கண் இமைப்பை வலது புற "மவுஸ்" பட்டனாகவும், இடது கண் இமைப்பை இடது புற "மவுஸ்" பட்டனாகவும், இரண்டு கண்களையும் இரண்டு முறை இமைத்தால், "டபிள் கிளிக்"காவும் பயன்படுத்தி கம்ப்யூட்டரில் "விஸ்வல் பேசிக்" மூலமாக, இந்த ஆணை புதிய மின்சார சர்க்யூட்டிற்கு செல்லும் இதில் எவ்வித "சென்சாரு"ம் பயன்படுத்தவில்லை. பின்பு சர்க்யூட்டிலிருந்து "ரிலே" மூலமாக மின்சார உபகரணங்கள் பல்பு, பேன், பிரிட்ஜ் இவற்றை ஆன், ஆப் செய்யலாம்.

    கண் இமைப்பு "கிரேடிபிரிடிக்சன் அல்காரிதம்" விதிமுறைப்படி இயக்கப்படுகிறது. இது மாற்றுத்திறனாளிகள் இருந்த இடத்திலேயே மின்சார உபகரணங்களை இயக்க வைக்க முடியும். இந்த புராஜக்ட், தமிழ்நாடு அறிவியல் ஆராய்ச்சி கழகத்திற்கு காப்புரிமை பெறுவதற்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது, என்றனர்.

    மாணவர்களையும், உதவி புரிந்த துறை தலைவர் கண்ணன், பேராசிரியர் ராம்குமாரை , பல்கலை தலைவர் கலசலிங்கம், வேந்தர் ஸ்ரீதரன், துணை வேந்தர் சரவணசங்கர், பதிவாளர் வாசுதேவன், துணை பதிவாளர் குருசாமி பாண்டியன் பாராட்டினர்.

    No comments: