15 வயது குழந்தைகளின் அறிவுத் திறனில், சீனா, ஜப்பான் மற்றும் கொரியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் சிறப்பாக திகழ்வதாக உலகளாவிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
PISA என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் அந்த சர்வதேச ஆய்வில், உலகம் முழுவதும் 65 நாடுகளைச் சேர்ந்த 15 வயதில் உள்ள 5 லட்சம் குழந்தைகள் பரிசோதிக்கப்பட்டார்கள். அவர்கள் கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் சோதனை தேர்வை எழுதினார்கள்.
இந்த சோதனையில், முதல்முறையாக, உலகின் முதல் 20 இடங்களுக்குள் பிரிட்டன் குழந்தைகள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணிதத்தில் அந்நாட்டு குழந்தைகள் 26வது இடத்தையும், ஆங்கில வாசிப்பில் 23வது இடத்தையும், அறிவியலில் 18வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
சீனாவின் ஷாங்காய் மற்றும் சிங்கப்பூர் குழந்தைகள் கணிதத்தில் முதலிடம் பெற்றுள்ளனர். இதுதவிர, ஹாங்காங், தாய்வான், மக்காவா, சுவிட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளும் முன்னணி இடங்களைப் பிடித்துள்ளன. ஆனால் இந்தியா முன்னணி இடம் எதையும் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment