"பெருகி வரும் மின் தேவையை பூர்த்தி செய்ய சூரியன், ஹைட்ரஜன் ஆற்றல்களை கொண்டு, ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது" என பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள, வேதியியல் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் குருஞானசம்பந்தர் இந்து மேல்நிலை பள்ளியில், முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் விஞ்ஞானி டாக்டர் கே.எஸ். கிருஷ்ணன் நினைவு அறிவியல் கருத்தரங்கு நடந்தது. இதில் அவர் பேசியதாவது:
நவீன யுகத்தில் நானோ கெமிஸ்ட்ரி மூலமாக ,பல அரிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மின்சார தேவை அதிகமாக இருப்பதால், வரும் காலங்களில் சூரிய ஆற்றல், ஹைட்ரஜன் ஆற்றல் ஆகியவை மூலமாக, மின் தேவையை சரி செய்ய ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
டங்ஸ்டன் இழைகளின் மூலமாக பல்புகள், சி.எப்.எல் பல்புகள் பயன்படுத்தப்படுவதால் ஆற்றலை சேகரிக்கலாம். இது அதிக காலங்கள் உழைக்கும் தன்மை பெற்றுள்ளது. இதில் கிராபைட்டின் மேல்பரப்பிலுள்ள கார்பன் வேதியியலின் ஒரு மைல் கல் ஆகும். அதிக காலம் உழைக்கும் மின்சார பல்புகளின் தயாரிப்பில், இது புது சாதனையை உருவாக்கியுள்ளது என்றார்.
No comments:
Post a Comment