கிராம நிர்வாக அதிகாரி பதவிக்கான காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில், காலியாக இருந்த, 40க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.,) பதவிகள் கடந்த 2010ம் ஆண்டில் நிரப்பப்பட்டது. கிராம நிர்வாக அதிகாரிகள் சிலர் ஓய்வு பெற்று விட்டனர்; பலர் பதவி உயர்வு பெற்று, சென்று விட்டனர். இதைதொடர்ந்து, அந்த பதவிக்கான காலியிடங்கள் மீண்டும் உருவாகி உள்ளது.
இந்த பதவிகளை, போட்டித் தேர்வு மூலம் நிரப்புவதற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. காலியிடங்கள், இட ஒதுக்கீடு, கல்வித் தகுதி, மற்ற தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட அனைத்து விபரங்களை https://recruitment.puducherry.gov.in என்ற இணையதளத்தில் இன்று (23ம் தேதி) காலை 10:00 மணியிலிருந்து பார்க்கலாம்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.