கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் புதியதாக துவங்கப்பட்ட ஆங்கில வழிக் கல்வி ஆசிரியர்களுக்கு, 10 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 396 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், புதியதாக இந்த கல்வியாண்டில் ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்பட்டது. ஆங்கில வழிக் கற்றல் ஏதுவாக அமையும் பொருட்டு, ஆசிரியர்களுக்கு ஆங்கிலத்தில் தகவல் பரிமாறும் பயிற்சி, ஒவ்வொரு வாரமும் கடைசி, இரண்டு வேலை நாட்களாக 10 நாட்கள் பயிற்சி நான்கு கட்டங்களாக 258 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் ஆசிரியர்களுக்கு சோடோஸ் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ராமமூர்த்தி, பூர்ணிமா மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் நளினா, அனுஷா ஆகியோர் வழங்கினர். பயிற்சியில், ஆங்கிலத்தில் பாடப்பொருளை எளிதாக விளக்கவும், உரிய உச்சரிப்புடன் பேசவும், செயல்பாடுகளின் மூலம் கற்றலை மெருகேற்றவும் கற்பிக்கப்பட்டது.
ஆசிரியர்களுக்கு, தன்னம்பிக்கை வளர்க்கும் பொருட்டு கடைசி 2 நாட்கள் ஐந்து நிமிடம் ஆங்கிலத்தில் பேசவும் வாய்ப்பளிக்கப்பட்டது. பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களை ஊக்குவிக்கும் விதமாக, எஸ்.எஸ்.ஏ., சி.ஏ.ஓ., பொன்குமார் பாராட்டிச் சான்றிதழ் வழங்கினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காவேரி செய்திருந்தார்.
No comments:
Post a Comment