Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, December 4, 2013

    அவமதிப்பு வழக்குகளால் கல்வித்துறை அதிகாரிகளுக்கு "சிக்கல்", "பைசல்" செய்து கொள்ள உத்தரவு

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கால், கல்வித்துறை அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்படுவதை தவிர்க்க, சம்பந்தப்பட்ட வழக்குகளை, 'பைசல்' செய்து முடிக்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    பள்ளிகல்வித் துறை சார்பில், மாணவர்களுக்கு முப்பருவ கல்விமுறை, சத்துணவு சாப்பிடும் மாணவருக்கு, நான்கு செட் சீருடை, நோட்டு புத்தகம், பாடப்புத்தகம், புத்தகப் பை, கல்வி உபகரணம், காலணி, நில வரைபடம், சைக்கிள், லேப்-டாப், சத்துணவு வழங்கல், சிறப்பு ஊக்கத்தொகை, கல்வி உதவித் தொகை ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. தமிழகத்தில் உள்ள, 67 கல்வி மாவட்டங்களில், தலா ஒரு கல்வி மாவட்டத்திற்கு, ஒரு முதன்மைக் கல்வி அலுவலர் - சி.இ.ஓ., மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், அனைவருக்கும் கல்வி இயக்கம் முதன்மை கல்வி அலுவலர் நியமிக்கப்பட்டு, கல்வித்துறை தொடர்பான அனைத்து விவகாரங்களையும் கவனித்து வருகிறது. இந்நிலையில், இவர்கள், நீதிமன்ற வழக்கு, கிராம கல்விக் குழு, பெற்றோர் - ஆசிரியர் குழு, கல்வி மேலாண் வளர்ச்சிக் குழு, மாணவர் குழு மற்றும் சங்கங்கள் உள்ளிட்டவை தொடர்பான பிரச்னைகளையும் சந்திக்கின்றனர். நீதிமன்ற விவகாரங்களை கையாளுவதற்காக, மாவட்ட அளவிலான கல்வி அதிகாரியின் அலுவலகங்களில், தனி அலுவலர் நியமிக்கப்பட்டு, பணிகள் கண்காணிக்கப்படுகின்றன.

    நிலுவை வழக்கு:

    அதில், கல்வி அதிகாரிக்கு எதிராக ஆசிரியர் வழக்கு, ஆசிரியர் பணியின் பணப்பயன் தொடர்பான வழக்கு, பள்ளியின் சொத்துகளை அபகரித்துக் கொண்டவருக்கு எதிரான வழக்கு, பள்ளி வளாகத்தில் நடந்த விபத்துகள் தொடர்பான வழக்கு, மாணவரின் பெற்றோர், பள்ளியின் மீது தொடர்ந்த வழக்கு என்பது உள்ளிட்ட, பல்வேறு வகையான வழக்குகள், சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னும், சில தீர்ப்புகள் அமல்படுத்தப்படாமல், மேல்முறையீடு, தடையாணை உள்ளிட்ட சட்டப் பிரச்னைகளில் சிக்கிக் கொள்கின்றன. அதனால், கல்வித்துறை அதிகாரிகளுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு, அதிகாரிகள் தள்ளப்படுகின்றனர். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை, சம்பந்தப்பட்ட நபர் மூலம் தீர்வு காண வேண்டும். தேவைப்பட்டால், மாவட்ட கல்வி அதிகாரி, தலைமையாசிரியர், உள்ளூர் குழுக்கள் மூலம், 'பைசல்' செய்ய வேண்டும். நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து, தீர்த்துக் கொள்ள வேண்டும் என, பள்ளிக் கல்வித் துறை இயக்குனரகம் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.

    உத்தரவு:

    கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாநில அளவில், ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், நூற்றுக்கணக்கான நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீதிமன்ற வழக்குகளை, சம்பந்தப்பட்ட அரசு வழக்கறிஞர், போலீஸ், தலைமையாசிரியர் ஆகியோரை ஒருங்கிணைத்து, வழக்குகளை முடிவுக்கு கொண்டு வருவதில், காலதாமதம் ஏற்படுகிறது. அதில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை பொறுத்தவரை, மாநில, மாவட்ட அளவிலான கல்வி அதிகாரியும், ஒரு பிரதிவாதியாக சேர்க்கப்படுவதால், தேவையற்ற பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. அதனால், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நீதிமன்ற வழக்குகளை கணக்கெடுத்து, சம்பந்தப்பட்டவருடன், பைசல் செய்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, அவமதிப்பு வழக்குகளை உடனடியாக முடித்துக் கொடுக்க, உயர் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

    No comments: