தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்க ளின் கூட்டு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் தஞ்சை பூக்காரத் தெரு கணேச வித்யாலாயா பள்ளியில் நடைபெற்றது.தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் வீ.க.நீலகண்டன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற
மாவட்டச் செயலாளர் உ.சுப்பிரமணியன், தமிழக ஆசிரியர் கூட் டணி மாவட்டச் செயலா ளர் சி.பன்னீர்செல்வம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ந.குருசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.ஆரம்பப்பள்ளி ஆசிரி யர் கூட்டணியின் ச.குமார் வரவேற்புரையாற்றினார்.
எம்.ஜான்போஸ்கோ சு.ரெ. பாலமுருகன், கோ. முருகன், ச.சிவகுமார் ஆகியோர் முன் னிலை வகித்தனர். ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் மாநிலப் பொதுச்செய லாளர் இரா.தாஸ் சிறப்பு ரையாற்றினார். ஜி.அருள், சி.திருமேனி, அ.எழிலரசன், நாக.சந்திரன், த.பத்திரநாத் ஆகியோர் உரையாற்றினார். வி.சீனுவாசன் நன்றியுரை வழங்கினார்.ஆறாவது ஊதியக் குழு வில் நடுவணரசு இடை நிலை ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ள ஊதியத்தை தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு 01.01.2006 முதல் தமிழக அரசும் வழங்க வேண்டும்; பங்களிப்பு ஓய் வூதியத் திட்டத்தை முற்றி லும் ரத்து செய்ய வேண்டும்; ஆசிரியர் தகுதித் தேர்வை உடனடியாக ரத்து செய்து வேலை வாய்ப்பக முன்னுரி மைப்படி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
No comments:
Post a Comment