Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, December 4, 2013

    பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான சி.பி.எஸ்.இ. திறனறி தேர்வு

    பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தனது Optional proficiency தேர்வை, அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் 14 முதல் 18ம் தேதி வரை CBSE நடத்துகிறது. 2014ம் ஆண்டு மார்ச்சில், பத்தாம் வகுப்பு இறுதியாண்டு தேர்வை எழுதும் மாணவர்களுக்கானது இத்தேர்வு.


    மாணவர்களின் திறன்கள் மற்றும் ஆரோக்கிய மனநிலையை அளவிடுவது, படிப்பில் சிறந்து விளங்கும் வகையில் அவர்களை ஊக்குவிப்பது, மாணவர்களின் நிலை குறித்து சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு தெரிவித்து, தகுந்த செயல்பாடுகளை மேற்கொள்ள ஆலோசனை வழங்குவது போன்ற பலவற்றை தனது நோக்கங்களாக இத்தேர்வு கொண்டுள்ளது.

    இத்தேர்வு, பத்தாம் வகுப்பில் ஒரு CBSE வாரிய மாணவர் படிக்கும் 5 முக்கியப் பாடங்களிலும் நடத்தப்படும். ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி தேர்வு உண்டு. ஒரு நாளைக்கு ஒரு தேர்வு நடத்தப்படும். இது பேப்பர் - பேனா அடிப்படையிலான ஒரு தேர்வு.

    ஒவ்வொரு தேர்வுக்கு 2.5 மணிநேரம் ஒதுக்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இத்தேர்வில் நெகடிவ் மதிப்பெண் உண்டு. ஒவ்வொரு பாடத்திற்கும் மொத்தம் 100 மதிப்பெண்கள். கேள்விகள், 9 மற்றும் 10ம் வகுப்பு பாடத்திட்டங்களின் அடிப்படையில் இருக்கும்.

    இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை டிசம்பர் இறுதிவரை சமர்ப்பிக்கலாம்.

    தேர்வு தேதி விபரங்கள்

    ஏப்ரல் 14 - ஆங்கிலம்

    ஏப்ரல் 15 - கணிதம்

    ஏப்ரல் 16 - அறிவியல்

    ஏப்ரல் 17 - சமூக அறிவியல்

    ஏப்ரல் 18 - இந்தி.

    No comments: