Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, December 18, 2013

    வளர்ச்சிக்கான தடை

    இந்தியாவின் வேலைவாய்ப்பு சந்தை மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. விரிவடைந்து வரும் சந்தைக்கு ஏற்ப திறமையான ஆட்கள் கிடைப்பதில் பற்றாக்குறை நிலவுகிறது. பற்றாக்குறை ஒரு பக்கம் இருந்தாலும், பணிக்கு சேரும் நபர்களின் எண்ணிக்கை 1.40 கோடியாக இருக்கிறது.


    வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணிக்கு அமர்த்தப்பட்டவர்களிலேயே கூட திறமையில்லாதவர்கள் இருக்கிறார்கள், என பல ஆய்வுகள் கூறும் நிலை ஒரு பக்கம் இருந்தாலும், திறன் இல்லாததால் படித்த படிப்புக்கேற்ற வேலையை பெற முடியாதவர்களின் எண்ணிக்கையும் பல மடங்காகப் பெருகி வருகிறது.

    பணிக்கு சேர்பவர்களின் திறன்கள் குறித்து உலகளவில் நடத்தப்படும் ஆய்வுகளை ஒப்பிடும்பொழுது இந்தியாவில் நடத்தப்படும் ஆய்வுகள் மிகவும் குறைவு. அதே நேரம் இளம் பணியாளர்களின் திறனை, பெரும் நிறுவனங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்வதில்லை. ஒரு சில நிறுவனங்களுக்கு, இது குறித்த தெளிவான பார்வை இல்லை என்பது மேலும் கவலைக்குரியது.

    இந்திய கல்விமுறை வருடத்திற்கு பல லட்சம் பொறியாளர்களை, வல்லுநர்களை உருவாக்குகிறது. ஆனால் அதில் மிகக் குறைவான சதவிகிதத்தினரே வேலைக்கு ஏற்ற திறன்களோடு இருக்கிறார்கள். இது தான் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்வதற்கு பெரும் இடையூறாக இருக்கிறது.

    No comments: