அம்மாப்பேட்டை செங்குந்த முதலியார் கல்யாண மண்டபத்தில், மார்கழி பெருவிழா, நேற்று துவங்கியது. விழாவில், நெல்லை கண்ணன் பேசியதாவது: "இந்தியா என்றாலே உயர்ந்தது என்று அர்த்தம். ஜாதிச் சண்டைகள் வரக்கூடாது. அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பாரதியார் பாடியுள்ளார்.
ஆனால், இப்போது எத்தனை ஜாதிச் சண்டைகள் நடக்கிறது. கண்டபடி சாப்பிடாமல் தேவையான உணவை மட்டுமே சாப்பிட வேண்டும்.
பல மொழிகளை தெரிந்து கொள்ள வேண்டும். பாரதியாருக்கு பல மொழிகள் தெரிந்திருந்தாலும் யாமறிந்த மொழிகளிலேலே சிறந்த மொழி தமிழ் என்று பாடியுள்ளார். இரவு 8.30 மணிக்கு படுத்து விட வேண்டும். அதிகாலை 4 மணிக்கு மாணவ, மாணவியர் எழுந்து படித்தால் படிப்பது மனதில் நிற்கும்.
மூன்று வயதிலேயே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி பெற்றோர்கள் பாடாய்படுத்துகின்றனர். ஐந்து வயதுக்கு மேல்தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். நன்றாக படித்தவர்கள் மிகப்பெரிய பதவியில் வந்ததில்லை. சாதாரணமாக படித்தவர்களே, உயர்ந்த பதவிக்கு வந்துள்ளனர். உழைத்துக் கொண்டே இருந்தால், மனிதனுக்கு மனதில் வேறுவிதமான சிந்தனைகள் வராது." இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment