Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, December 6, 2013

    9,25,000 கி.மீ பயணம் செய்து புவியீர்ப்பு மண்டலத்தை கடந்தது மங்கல்யான்

    செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணம் செய்யும் மங்கல்யான் விண்கலம் நேற்று பூமியிலிருந்து 9 லட்சத்து 25 ஆயிரம் கி.மீ தூரத்தை தாண்டியது. இதன் மூலம் புவியீர்ப்பு மண்டலத்தை கடந்துசென்ற முதல் இந்திய விண்கலம் என்ற பெருமை மங்கல்யானுக்கு கிடைத்துள்ளது.
    செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக ரூ.450 கோடி செலவில் உருவாக்கப்பட்ட மங்கல்யான் விண்கலம் பி.எஸ்.எல்.வி சி-25 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 5ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியை சுற்றிக் கொண்டிருந்த மங்கல்யான் விண்கலம், கடந்தம் 1ம் தேதி அன்று புவி சுற்றுவட்ட பாதையில் இருந்து விலக்கி, செவ்வாய் கிரகம் நோக்கி வெற்றிகரமாக உந்தப்பட்டது. விண்வெளியின் ஈர்ப்பு விசையில் சீராக சென்று கொண்டிருக்கும் மங்கல்யான் நேற்று மதியம் 1.14 மணியளவில், பூமியிலிருந்து 9 லட்சத்து 25 ஆயிரம் கி.மீ தூரத்தை கடந்து சென்று விட்டது. இதன் மூலம் புவியீர்ப்பு மண்டலத்தை தாண்டி சென்ற முதல் இந்திய விண்கலம் என்ற பெரும் மங்கல்யானுக்கு கிடைத்துள்ளது. மங்கல்யான் பாதையில் ஒருவேளை விலகல் ஏற்பட்டால், அதை வரும் 11ம் தேதி, ஏப்ரல், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் 4 முறை சரி செய்யவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

    No comments: