Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, December 7, 2013

    நல்ல நிலையில் உள்ள பள்ளியை சீரமைக்க ரூ.37 லட்சம்

    விருதுநகரில், நல்ல நிலையில் உள்ள 14 மாணவர்கள் பயிலும் நகராட்சி பள்ளியை சீரமைக்க 37 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அருகில் உள்ள மற்றொரு நகராட்சி பெண்கள் பள்ளியில், மாணவிகள் உட்கார வழியின்றி, வெட்ட வெளியில் பாடம் படிக்கின்றனர்.
    இங்கு கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்காமல், நல்ல நிலையில் உள்ள நடுநிலை பள்ளிக்கு நிதி ஒதுக்கியது,பெற்றோர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    விருதுநகர் சங்கரலிங்க நாடார் ரோடு பகுதியில் நகராட்சி நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 4 ஆசிரியர்கள் உள்ளனர். இங்கு 41 மாணவர்கள் படிக்கின்றனர். இதில், 5 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை 14 மட்டுமே. இந்த பள்ளியின் வகுப்பறை தரை தளம் "டைல்ஸ்" பதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு "பெஞ்ச், சேர்" உள்ளன. இவ்வளவு வசதி இருந்தும், மாணவர்களை தான் காணோம்.

    இங்குள்ள சுற்றுச்சுவர், சத்துணவு மையம், கழிப்பறை நல்ல நிலையில் உள்ளது. இந்நிலையில், நகராட்சி கல்விநிதி திட்டத்தில், இந்த பள்ளிக்கு மராமத்து பணி செய்வதற்காக, அக்.,ல் நடந்த கவுன்சிலர் கூட்டத்தில், 12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டது. இதேபோல் நவ.,ல் நடந்த கவுன்சிலர் கூட்டத்தில், சத்துணவு மையம், சுற்றுச்சுவர், கழிப்பறைகள் முற்றிலும் பழுதடைந்துள்ளதாக கூறி புதிய கட்டடம் கட்டுவதற்காக 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தனர். இதற்கான டெண்டர் விடும் வேலையில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    ஆனால், இதன் அருகே, நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள தங்கம்மாள் பெரியசாமி மேல்நிலை பள்ளியில், உட்கார வகுப்பறை இன்றி, மாணவிகள் வெட்ட வெளியில் அமர்ந்து ள்ளனர். இங்கு, புதிய கட்டடம் கட்ட, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இது பெற்றோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    நகராட்சி கவுன்சிலர் ஜெயக்குமார் (கம்யூ.,) கூறுகையில், "நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில், மாணவிகள் படிக்க வகுப்பறை இல்லாமல், மரத்தடியில் உட்கார்ந்து படிக்கின்றனர். இங்கு கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டாமல், நல்ல நிலையில் உள்ள நடுநிலை பள்ளியில் கட்டடம் கட்ட, அதிகாரிகள் முடிவு செய்திருப்பது, முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக தோன்றுகிறது" என்றார்.

    நகராட்சி (பொறுப்பு) கமிஷனர் மணி கூறுகையில், "பள்ளி சுற்றுச்சுவர் உட்பட புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு, 25 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளுக்கு வாய்ப்பில்லை" என்றார்.

    No comments: