Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, December 11, 2013

    குரூப்-2 வினாத்தாள் வழக்கு: குற்றப் பத்திரிகை தாக்கல்

    டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 வினாத்தாள் வெளியான வழக்கில், ரிஷிகேஷ் குண்டு முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு 242 பக்க குற்றப்பத்திரிகையை, கோவை சி.பி.சி.ஐ.டி., போலீசார், நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.


    தமிழகத்தில் 2012 ஆகஸ்டில் நடந்த குரூப் 2 தேர்வில், தேர்வுக்கு முன்பே ஈரோடு, தர்மபுரி மாவட்டம், கம்பையநல்லூரில் வினாத்தாள் வெளியானதால், தேர்வு ரத்தானது. தனக்கொடி, செந்தில் உட்பட, எட்டு பேரை, போலீசார் கைது செய்தனர். பின், இவ்வழக்கு கோவை, சி.பி.சி.ஐ.டி., போலீசுக்கு மாற்றப்பட்டது.

    அரசு அதிகாரிகளான, நாகை மாவட்ட வணிக வரித்துறை துணை கமிஷனர் ரவிகுமார், சென்னை வணிக வரித்துறை துணை கமிஷனர் ஞானசேகரன் மற்றும் முக்கிய குற்றவாளியான அச்சக உரிமையாளர், ரிஷிகேஷ் குண்டுவை போலீசார் கைது செய்தனர்.

    கடந்த, 16 மாதங்களுக்கு பின், சி.பி.சி.ஐ.டி., போலீசார், நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக அச்சக உரிமையாளர் ரிஷிகேஷ் குண்டு சேர்க்கப்பட்டுள்ளார். 30 பேர் குற்றவாளிகளாகவும், 90 பேர் சாட்சியங்களாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    வினாத்தாள் வெளியானதாக புகார் தெரிவித்து சிக்கிய, பவானியை சேர்ந்த செந்தில் மனைவி தனக்கொடி, 30வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். 242 பக்க குற்றப்பத்திரிகையை, கோவை, நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி.,போலீசார் தாக்கல் செய்து, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் வழங்கினர்.

    No comments: