மாநில பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதலுக்கான அரசாணை இன்று (03.12.2013) வெளியாகும் என எதிர்பார்ப்பு. மாநில பதிவு மூப்பு அடிப்படையில் 2009க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்தது.
இது சார்ந்து வழக்கு தொடுக்கப்பட்டு உச்சநீதிமன்றம் வரை சென்று மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் பெறும் வாய்ப்பு அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.
அது சார்ந்த அரசாணை இன்று (02.12.2013) வெளியாகும் என நம் SSTA மாநில பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வரசாணை தலைமைச்செயலகத்தில் கிடைக்கப்பெற்றவுடன் அவை SSTA பொறுப்பாளர்கள் அனுப்பப்பெற்றவுடன், நம் இணையதளத்தில் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment