Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, December 16, 2013

    குரூப் - 1 தேர்வு: வயது வரம்பினை உயர்த்த தேர்வர்கள் கோரிக்கை

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நடத்தும் குரூப் - 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் என, தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து, குரூப் - 1 தேர்வுக்கான வயது வரம்பு உயர்த்துவோருக்கான சங்கம் சார்பில் வெங்கடேசன், ரிச்சர்டு, பிரியா, ராமநாதன், அருள்மொழி, சுமதி ஆகியோர் சென்னையில் அளித்த பேட்டி:

    "டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் குரூப் - 1 போட்டித் தேர்வை எழுத பொதுப் பிரிவினருக்கு வயது வரம்பு 30; பி.சி., - எம்.பி.சி., - எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு வயது வரம்பு 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    கடந்த, 2001 முதல் 2013 வரை 12 ஆண்டுகளில் ஐந்து முறை மட்டுமே குரூப் - 1 தேர்வுகள் நடந்து உள்ளன. குரூப் - 1 தேர்வு அறிவிப்பில் இருந்து பணி நியமனம் வரை மூன்று ஆண்டுகள் ஆகின்றன.


    இதில், ஒருவர் ஒரு முறை வாய்ப்பை இழக்கும் பட்சத்தில் மூன்று ஆண்டு வரை காத்திருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் பலர் தேர்வுக்கான வயது வரம்பை கடந்து விடுகின்றனர். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் போல டி.என்.பி.எஸ்.சி., சார்பில் தொடர்ச்சியாக தேர்வுகள் நடத்தப்படுவதில்லை. சில நேரங்களில் மிகக் குறைவான காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.

    குரூப் - 1 போட்டித் தேர்வுகளை கிராமப்புறங்களைச் சேர்ந்த 50 சதவீதம் பேர் எழுதுகின்றனர். குறைந்த வயது வரம்பால் கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அதே நேரம் குஜராத், ஆந்திரா, கர்நாடகா, அரியானா, மேற்கு வங்கம், அசாம், திரிபுரா மாநிலங்களில், வயது வரம்பு, அனைத்து பிரிவினருக்கும் 45 வயது என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    எனவே, தமிழகத்தில் பொதுப்பிரிவினருக்கு 35 என்றும் மற்ற பிரிவினருக்கு 40 என்றும் வயது வரம்பை உயர்த்த வேண்டும்." இவ்வாறு, அவர்கள் கூறினர்.

    1 comment:

    KALVI said...

    உன்மையான செய்தி பொது பிரிவினருக்கு 40 என்றால் கூட நல்லது,