Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, December 5, 2013

    எஸ்.எஸ்.ஏ. கண்காணிப்புக் குழு கூட்டம்:12 புதிய பள்ளிகளைத் தொடங்க பரிந்துரை

    2014-15 கல்வியாண்டில் 12 புதிய பள்ளிகளை தொடங்க வேண்டும் என்று, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டத்தில் பரிந்துரை வைக்கப்பட்டுள்ளது.

    அனைவருக்கும் கல்வி இயக்கம் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் புதன்கிழமை நடந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் 2013-14 கல்வியாண்டு நிதி ஒதுக்கீடு மற்றும் செலவினம் பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும் 2014-15ஆம் கல்வியாண்டு முழு வரைவுத் திட்டம் பற்றியும், பள்ளிக் கட்டுமானப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    இதில், அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தில் புதிதாக 12 பள்ளிகள் கட்ட வேண்டும். வால்பாறையில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு குளிர் தாங்கும் கம்பளி ஆடை, பேன்ட் ஆகியவை வழங்க வேண்டும். பள்ளிகளில் மதிய உணவு போல காலையில் பால் வழங்க வேண்டும் என்று, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

    அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்திற்கு கடந்த 2013-14 கல்வியாண்டில் ரூ. 90 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இக்கூட்டத்தில் எம்எல்ஏ.க்கள் எம்.ஆறுமுகம், எம்.கே.முத்துகருப்பண்ணசாமி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கனகராஜ், முதன்மைக் கல்வி அலுவலர் அ.ஞானகௌரி, அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் லத்திகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    No comments: